நோன்பின் ஒழுக்கங்கள்
நாவைப் பேணல் – பொய், கோள், புறம், வீண் பேச்சு, தீய வார்த்தைகள் பேசுதல், சண்டையிடல் போன்றவற்றில் இருந்து தன் நாவைப் பேணுதல். பிறர் சண்டையிட்டாலும் நான் நோன்பாளி என்று கூறித் தவிர்த்தல் ஆகியவை இதில் அடங்கும்.
நோன்பாளிக்கு நோன்பின் பரிந்துரையும், குர்ஆனின் பரிந்துரையும்
இறைவா, பகற்காலங்களில் உணவு உட்கொள்ளமுடியாமலும், ஆசைகளை அனுபவிக்க விடாமலும் தடுத்து வைத்திருந்தேன். இவருக்காக நான் செய்யும் பரிந்துரையை நீ ஏற்க வேண்டும் என்று நோன்பு கூறுகின்றது. இரவுக்காலங்களில் இவரை உறங்க விடாமல் நான் தடுத்து வைத்திருந்தேன். இவருக்காக நான் புரியும் பரிந்துரையை நீ ஏற்க வேண்டும் என்று திருக்குர்ஆன் கூறும். இரண்டின் பரிந்துரைகளும் ஏற்கப்படும், என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (பைஹகீ)
No comments:
Post a Comment